Showing posts with label விடுப்புமுனி. Show all posts
Showing posts with label விடுப்புமுனி. Show all posts

Thursday, 2 July 2015

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பாஸ்டன் உரை

ஜெயமோகன் அவர்கள், பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய சாராம்சம் பின் வருமாறு. ஒலி வடிவமாக யூடியூபில் கேட்க கிடைக்கிறது. 

1.புத்தக படைப்பு அனைத்தும் ஒரு நேரடியான அனுபவம் கிடையாது. எழுத்தாளரிடம் இதனை கேட்ககூடாது.

Tuesday, 23 June 2015

இன்று நேற்று நாளை திரைப்படம்: எந்த வகையறா படம் இது?

ன்னும் சிலதினங்களில் இந்த சயின்ஸ் பிக்சன் படம் வெளியாகும் என நினைக்கிறேன், இப்படத்தின் teaser காண இங்கு சொடுக்கவும் அல்லது teaser ஐ கீழே காணவும். 

காலப்பயணம் அதுவும் பின்னோக்கிய பயணம் என்றுமே கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். நம்மூர் மக்கள் இதன் teaser க்கு கொடுத்த வரவேற்பு

Monday, 22 June 2015

Peculiar Habits-ஐ ரசிப்பவரா நீங்கள்?

Peculiar Habits உள்ளவர்களோ, அதில் ஆர்வம் இருப்பவர்களோ அல்லது அதில் மிகுந்த ரசனை உடையவர்களோ அமேலி எனும் பிரெஞ்சு படத்தை ரசிக்கலாம், சினிமா பார்க்கும் நேரமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த சிறுகதையை படிக்கலாம். இந்த சிறுகதையும் மேற்சொன்ன அமேலி படமும் வெவ்வேறு கதைகள் கொண்டன என்றாலும் படத்தின் கரு ஒன்றே தான். Peculiar Habits.

Thursday, 18 June 2015

எலி ப்ரை - KFC ஸ்பெஷல்

இந்தப்படம்  facebook இல் பதிவேற்றிய சில நாட்களிலேயே சுமார் ஒண்ணேகால் லட்சம் ஷேர்களை பெற்று இருக்கிறது.. எலி வழக்கமான சிக்கன் போல வறுத்து இருந்ததை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி அளித்தது.  சில மாதங்களுக்கு முன்பு கேஎப்சி யில் சிக்கனுக்காக வளர்க்கப்படும் கோழிகளும் அதற்கு ஊட்டம் கொடுக்கும் உணவு முறைகளும்  பல சர்ச்சைகள் எழுந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த வறுத்த எலி விஷயம்

Tuesday, 16 June 2015

கவிதை முயற்சிகள் #3

ஹோமோ சேப்பியன்ஸ்



பறவைகளுக்கு தெரியுமா, 
விலங்குகளுக்கு ??

Monday, 15 June 2015

கவிதை முயற்சிகள் #2


இவன் எந்த வர்க்கம்?

 உழைப்பிலிருந்து திமிரை எடுப்பவன் தொழிலாளி வர்க்கம்.

Thursday, 11 June 2015

கவிதை முயற்சிகள்

ஜனரஞ்சகம்


நீயா நானா பகுதி எப்படி இத்தனை பேருக்கு
பிடித்தமாக இருக்கிறது?

குடும்பத்தலைவன் ஆர்வமாக பங்கேற்பாளர்களின்
பேச்சுகளை உன்னிப்பாக கவனிக்கிறான்,

இடையினில் வரும் விளம்பரங்கள்...

Tuesday, 9 June 2015

Link வடிவில் பரவும் காமத்தீ.


1. கம்ப்யூட்டர் வைரஸ் என்பது கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் தெரிந்த வீணாப்போனவன் எவனோ செய்யும் வெளங்காத வேலை என்பதை அறிக.

2. "நண்பா, இந்த வீடியோல நீ எப்படி இருக்க பாரு" என்று பேசுபுக்கை உழன்றடிக்கும் கிளுகிளு வைரஸ்தான் தற்போதைய இணைய கபாலி. (இன்னும் official ஆக பெயர் வைக்கப்படவில்லை, அதனால் இப்போதைக்கு "நண்பா, இந்த வீடியோல நீ எப்படி இருக்க பாரு" என்றே அழைப்போம்).

3. இந்த link உருவில் பரவும் வைரஸானது நம் இன்பாக்ஸில் வர வாய்ப்பு உள்ளது. அந்த link ஐ நீங்கள் கிளிக் செய்தால் அது பலானது பலானது படங்களை ஒப்பன் செய்ய வல்லது. 

Friday, 5 June 2015

ஊழல், அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் சொந்தமா?



குற்ற வகை : 
ஊழல்.

ஊழல் பெயர் : 
The Forex Scandal or The Foreign Exchange Scandal.
அந்நிய செலாவணி ஊழல்.

ஊழலின் தோராய அளவு : 
குறைந்தபட்சம் 1,20,000 கோடி டாலர்கள் தினசரியாக.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.70,00,000 கோடி தினசரியாக.

ஊழல் நடைபெற்ற ஆண்டுகள் : 
2008 முதல் 2013 வரை. ஐந்து வருடங்களாக..

காரணகர்த்தா 

Monday, 6 April 2015

நிகழ்வு: வா.மணிகண்டன் படைப்புகள்: விமர்சனம் & கலந்துரையாடல்


மகேஷ் என்பவரைப்பற்றிய விளக்கு எனும் பதிவை நிசப்தத்தில் படித்தபோதுதான் எனது அலுவலகத்தில் ஆன்றாய்ட் தொழில்நுட்பத்தில் வேலை தேவை எனும் செய்தி எனக்கு வந்தடைந்திருந்தது. மகேஷின் ரெசுமே கேட்டு உடனே வா.மணிகண்டனுக்கு மெயில் அனுப்பிவிட்டேன். முதல் முறையாக தொடர்பு கொள்கிறோம் எனும் பெயரில் "உங்க பதிவுகள நான் தினந்தோறும் படிக்கிறேன். படிக்க அருமையா இருக்கு" எனும் பாராட்டு பத்திரம் வாசிக்க அலுவலகத்தில் நேரமில்லை அவ்வளவு பெரிய எழுத்து சோம்பேறி நான். அதனால்  மெயிலின் சாராம்சமான ரெசுமே தேவை என்பதை மட்டும் குறிப்பிட்டு கேட்டிருந்தேன். அனுப்பினார், நான் HR டீமிற்கு கருமமே கண்ணாக பார்வர்ட் செய்துவிட்டு எனது வேலையில் மூழ்கிவிட்டேன். பிறகு அந்த வேலை தொடர்பாக என்ன நடந்தது என்று மணிகண்டனுக்கு தெரியாது.

Tuesday, 17 March 2015

சாரு நிவேதிதாவின் புதிய எக்சைல் புத்தக விமர்சனம்


பால்ய காலத்திலேயே விகடன் குமுதம் என படிக்கும் பழக்கம் இருந்தும் சாரு என்பவர் ஏதோ பெண் கவிஞர் போல என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு தான் மனம் கொத்திப்பறவை எனும் தொடர் விகடனில் கண்டேன். 

"பல மணி நேரம் என்னை நடிக்கவைத்து கடைசியில் ஆர்மோனியம் தடவும் விரலை மட்டும்தான் படம் பிடித்தார் இயக்குனர்"  

என்ற வரி மட்டும் மொத்த தொடரின் நினைவில் தங்கியிருக்கிறது. அந்த தொடர் புத்தகமாக கிடைத்தால் கூட வாங்க நான் தயாரில்லை. எல்லாம் புதிய எக்சைல் படுத்திய பாடு. அதை வாங்கும் எண்ணம் தோன்றியதற்கு காரணம் அராத்துதான்.

Saturday, 14 March 2015

சென்னை படையெடுப்பு


ந்த படையெடுப்பு சென்னையில் மட்டும்தானா தெரியவில்லை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் மற்றும் திங்கள்கிழமை காலையிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது, பண்டிகைக்கு முன்னும் பின்னும் இப்படித்தான். இத்தகைய தினங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்தில் அல்லது வேறு வாகனங்களில் முண்டியடிப்பது ஏன்?

Tuesday, 3 February 2015

சிறுகதை - பொழுதுபோக்கு சம்பவம்.


ரொம்ப நேரம் பொறுத்திருந்து பார்த்து கடுப்பாகி சொன்னான் காதலன்.
"இப்படி வா, என்கூடவே க்ராஸ் பண்ணிடு.."



         வாகன நெரிசலான ட்ராபிக்கில் சிவப்பு சிக்னலுக்கு பயந்து எப்படியாவது சிக்னலை தாண்டி விட வேண்டும் என்றே கன வாகனங்களும் சீறிப்பாய்ந்தன. இந்த காதலர்கள் மாலை நேர விளிம்பில் பிரிய மனமில்லாது வீடு திரும்பிய நேரத்தில் பாதசாரிகள் சிக்னல் பச்சை விழாமலே இருந்தது. இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று அவள் கையைப்பற்றி குறுக்கே கடந்தான். அவள் பயத்தில் திமிரியபடியே

"ஏய் லூசு, அடிபட்டு சாகப்போறியா..?"

Tuesday, 1 April 2014

நேர்காணல் #1: ஓரான் பாமுக்


ஓரான் பாமுக்
”ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்து மணிநேரத்தை எழுதுவதற்காகக் கழிக்கிறேன்”

”எனக்கு ஞாபகம் உள்ளவரை,எதை எழுதுவது என்று எனக்குத் தெரிவதற்கு முன்பாகவே ஒரு நாவலாசிரியனாக நான் முடிவெடுத்தேன்.இரண்டு நாவல்களை ஒரே வகையில் எழுதாமல் பார்த்துக் கொள்கிறேன். வடிவத்திலும்,நடையிலும்,மொழியிலும்,மனப்பாங்கிலும், ஆளுமையிலும் பரிசோதனைகள் செய்வதும்,ஒவ்வொரு புத்தகத்தையும் வித்தியாசமாக யோசிப்பதும் தான் சுவாரஸ்யம்,சவால்.”
-ஓரான் பாமுக்

*******எந்த இடத்தில் அமர்ந்து எழுதுகிறீர்கள்?

பாமுக் : நீங்கள் உறங்குகிற அல்லது உங்கள் துணைவருடன் பகிர்ந்து கொள்கிற இடத்திலிருந்து நீங்கள் எழுதுகிற இடம் தனியாக இருக்க வேண்டுமென்பது என் அபிப்ராயம்.குடும்பச் சடங்குகளும் பழக்கங்களும்
கற்பனையை எந்த விதத்திலோ கொன்றுவிடுகின்றன.எனக்குள்ளிருக்கும் அரக்கனை அவை கொன்றுவிடுகின்றன.கற்பனை செயலாற்றத் தேவையான,மற்றோர் உலகத்திற்கான ஏக்கத்தை,சுவாரஸ்யமற்ற குடும்ப வழமை மங்கிப்போக வைத்து விடுகிறது.எனவே பல வருடங்களாக,என் வீட்டிலிருந்து தள்ளி ஓர் அலுவலகத்தையோ அல்லது சிறியதோர் இடத்தையோ எழுதுவதற்காக வைத்திருக்கிறேன்.எனக்கு வெவ்வேறு குடியிருப்புகள் எப்போதுமே இருந்திருக்கின்றன.
என் மனைவி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி செய்யும் போது ஒரு பாதி செமஸ்டர் காலத்தை நான் அமெரிக்காவில் கழித்தேன்.மணமான மாணவர்களுக்கான குடியிருப்பில் நாங்கள் தங்கியிருந்தோம்.போதிய இடமின்மையால் அதே இட்த்தில் நான் தூங்கவும் எழுதவும் வேண்டியிருந்தது.குடும்ப வாழ்க்கையின் மிச்சங்கள் சுற்றிலும் இறைந்திருந்தன.இது என்னை வீழ்த்தியது.காலையில் ஏதோ வேலைக்குப் போகிறவன் போல என் மனைவியிடம் ‘குட்பை’ சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்து சில ’பிளாக்’குகளைச் சுற்றிக் கடந்து விட்டு அலுவலகத்திற்குள் நுழையும் ஒருவனைப் போன்ற பாவனையில் திரும்ப வீட்டிற்கு வருவேன்.
பத்து வருடங்களுக்கு முன்னால் பாஸ்ஃபோரஸ் ஜலசந்திக்கெதிரே பழைய நகரத்தை நோக்கியபடியிருந்த ஒரு குடியிருப்பை நான் கண்டுபிடித்தேன்.இஸ்தான்புல்லின் மிகச்சிறந்த ‘வ்யூ’வைக் கொண்டிருந்தது அது.நான் வசிக்குமிடத்திலிருந்து இருபத்தைந்து நிமிட நடையில் இருந்தது.புத்தகங்கள் நிரம்பி,ஜன்னலையொட்டி என் மேஜை அமைந்த இடம்.ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்து மணிநேரத்தை அங்கே கழிக்கிறேன்.

*****ஒரு நாளைக்கு பத்துமணி நேரமா?

பாமுக் : ஆம்,நான் ஒரு கடுமையான உழைப்பாளி.அதை அனுபவித்துச் செய்கிறேன்.பேராசைக்காரனென்று சிலர் என்னைச் சொல்வதில் உண்மை கூட இருக்கலாம்.ஆனால் நான் செய்வதை ரசித்துச் செய்கிறேன்.ஒரு குழந்தை அதன் பொம்மைகளோடு விளையாடுவதைப் போல என் மேஜையில் அமர்ந்து பணியாற்றுவது எனக்கு விருப்பமாக இருக்கிறது.முக்கியமாக அது ஒரு வேலைதான்,ஆனால் அதுவே விளையாட்டாகவும் சந்தோஷமாகவும் கூட இருக்கலாம்.

*******நீங்கள் எப்போதாவது கவிதை எழுதியதுண்டா?

பாமுக் : இதை அடிக்கடி கேட்டிருக்கிறார்கள்.பதினெட்டு வயதில் துருக்கி மொழியில் சில கவிதைகள் எழுதி பிரசுரமும் ஆகியிருக்கின்றன.அதன்பின் விட்டுவிட்டேன்.இதற்கு என் விளக்கம் என்னவென்றால் கவிஞன் என்பவன் மூலமாகத்தான் கடவுள் பேசுவதாக நினைக்கிறேன்.கவிதையால் நீங்கள் பீடிக்கப்பட வேண்டும்.கவிதை எழுத நானும் முயற்சித்தேன்.ஆனால் கொஞ்ச காலம் கழித்து கடவுள் என்னிடம் பேசுவதில்லை எனக் கண்டு கொண்டேன்.இது எனக்கு வருத்தமாக இருந்தது.அதன்பின்,கடவுள் என் மூலமாகப் பேசுவதாக இருந்தால் அவர் என்ன பேசுவார்?என்று கற்பனை செய்ய முயற்சித்தேன்.நான் மிகவும் சிரத்தையாக,மெதுவாக,அது உரைநடை எழுத்தாக,புனைகதை எழுத்தாக இருந்தது.எனவே ஒரு குமாஸ்தாவைப் போல நான் பணியாற்றத் தொடங்கினேன்.மற்ற எழுத்தாளர்கள் நான் இப்படிக் கூறுவது ஓர் அவமதிப்பாக நினைக்கலாம்.ஆனால் இதை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஒரு குமாஸ்தாவைப் போல உழைக்கிறேன்.கவிஞனைப் போலல்லாமல் நாவலாசிரியனுடையது ஒரு குமாஸ்தா பணியைப் போன்றது என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறேன்.நாவலாசிரியன் ஓர் எறும்பைப்போல நெடுந்தூரத்தை அவனது பொறுமையால் மெதுவாகக் கடக்கிறான்.ஒரு நாவலாசிரியனின் அருளிப்பாட்டினாலும் கற்பனாவாதப் பார்வையிலும் நம்மைக் கவர்வதில்லை.அவன் பொறுமையினால்தான்.

*******போகப்போக,உங்கள் எழுத்து உங்களுக்கு எளிதாக விட்டதென்று நீங்கள் கூறுவீர்களா?

பாமுக் : துரதிருஷ்டவசமாக இல்லை.என் கதாபாத்திரம் அறை ஒன்றிற்குள் நுழைய வேண்டும் என்று சில நேரங்களில் தோன்றும்.இருந்தும் அவனை எப்படி உள்ளே கொண்டு வருவது என்று தெரியாது.எனக்குத் தன்னம்பிக்கை கூடுதலாகவே இருக்கலாம்.அதனால் பரிசோதனைகள் கூடுதலாகவே இருக்கலாம்.அதனால் பரிசோதனைகள் எதையும் புரியாமல் பேனாவின் முனைக்கு என்ன வருகிறதோ,அதை எழுதுவதால் சிலவேளைகளில் அது உதவிகரமாக இருப்பதில்லை.கடந்த முப்பது வருடங்களாக நான் புனைகதை எழுதி வருகிறேன்,எனவே நான் சிறிதளவு முன்னேறியிருப்பதாகத் தான் நினைக்க வேண்டும்.இருந்தும் சிலநேரங்களில் வழியேதுமில்லாத முட்டுச்சந்தில் வந்து நின்று விடுகிறேன்.அறைக்குள் ஒரு பாத்திரத்தால் நுழைய முடியாது,என்ன செய்வதென்று எனக்கும் தெரியாது,இன்னமும்.முப்பது வருடங்கள் கழித்தும்.
புத்தகங்களை அத்தியாயங்களாகப் பிரித்துக் கொள்வது நான் சிந்திக்கும் முறைக்கு மிக முக்கியமானது.ஒரு நாவலை எழுதும் போது,கதைப்போக்கை முழுமையாக நான் அறிந்திருந்தால்-பெரும்பாலும் எனக்குத் தெரிந்திருக்கும்-அதனை அத்தியாயங்களைப் பிரித்து ஒவ்வொன்றிலும் நிகழவேண்டிய விவரங்களை யோசித்துக்கொள்வேன்.முதல் அத்தியாயத்தில் துவங்கி வரிசையாக எழுதுவதென்பது அவசியமில்லை.எனக்கு தடங்கலாகும் போது அதுவொன்றும் எனக்கு மோசமான விஷயமில்லை-என் கற்பனையில் எது கிளைக்கிறதோ அதை எழுதத் தொடங்கி விடுவேன்.முதல் அத்தியாயத்தை எழுதிவிட்டு ஐந்தாவதிற்குச் சென்று விடுவேன்.பின் அது எனக்கு உவப்பாக இருக்காவிட்டால் பதினைந்தாவது அத்தியாயத்திற்குச் சென்று அங்கிருந்து தொடர்வேன்.

தமிழில் : ஜி.குப்புசாமி.

(தீராநதி மே 2008.ஜீன் 2008 ஆகிய இரு இதழ்களில் வந்த பாமுக்கின் நேர்காணலில் மே 2008 இதழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

நன்றி : தீராநதி (மே 2008)

Wednesday, 5 February 2014

சினிமா விமர்சனம் #1: பிக் பிஷ்






சிறுவயதில் இருளைக்கண்டு பயந்த போது, நம் அப்பா எதாவது குட்டி கதைகள் (அ) கிளைக்கதைகள் சொல்லி நம்மை தூங்க வைப்பதுண்டு. பாலக மனத்தில் பயம் நீங்கினாலும் , நம் அப்பா அதிலிருந்து நம்மை மீட்டு விடுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது.படிப்படியாக நாம் நம் அப்பாவின் நடவடிக்கையை கண்டு பெருமிதம் கொள்வோம், ரசிகன் ஆவோம்.நமது அடுத்தடுத்த செய்கைகளில் நமது inspiration ஆக அவர் இருந்திடுவார். 

காலப்போக்கில் நம்மை நாமே அறிந்து கொள்ளும் தருணம் வரும் வயதில், அவர் மீது ஈர்ப்பு குறையும், மாறும் , மழுங்கும் (அ) இல்லாமல் போய் விடும். ஈர்ப்பு கூடும் என்பது அரிதே.

இது பெரும்பாலானோர் வாழ்க்கையிலும் ஒரு அத்யாயமே. அப்பா மகன் உறவை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் சமீபமாக(2005 பிறகு) வந்த படங்கள் அதிகம். (தவமாய் தவமிருந்து, எம் மகன், சந்தோஷ் சுப்ரமணியம், வாரணம் ஆயிரம் மேலும் சில). ஒவ்வொரு படமும் ஒரே மையக்கரு இருந்தாலும் கதை அமைப்பில் சற்று வித்த்யாசம் தென்படும். [நமக்கு வாரணம் ஆயிரம் படம் தவிர மத்தது எல்லாமே பிடித்தம் தான்].

இவ்வகை படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் நீங்கள் Big Fish படத்தை ரசிக்கலாம்.


தனது திருமண விழாஇறுதியில், தனது சிறு வயதில் சொன்ன தற்பெருமை கதைகளை , அப்பா(Edward Bloom) எல்லாரிடமும் வயது வரம்பு பார்க்காமல் அனைவரிடமும் பகிர்கின்றார். கேட்பவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதால், இம்மாதிரியான கதைகள் சொல்வது அவருக்கு மிகவும் பிடித்தம். ஆனால் மகனுக்கோ(Will Bloom) இதை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பழக்கப்பட்டதால் மிகவும் மொக்கையாக இருப்பதென்று உள்ளுக்குள் ஒரு புழுக்கம். அதனால் மோதிரம் மாத்திய கையோடு அந்த Marriage Hall ஐ விட்டு வெளியே வந்துவிடுகிறான்.

தனிக்குடித்தனம் செல்லும் முன்னர் தனது மொக்கையான அனுபவத்தை தன் அப்பாவிடம் எடுத்து கூறுகின்றான்.
"இனிமேல் இது மாறி ப்ளேடு போடாதீங்கப்பா தாங்க முடீல" என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறான்.
அப்பாவும் "உனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றால் இத்தோடு நான் நிறுத்திக்கிறேன்" என்கிறார்.
"அப்பா ! எனக்கு மட்டும் தர்ம சங்கடம் கெடயாது அது உங்களுக்கும் தான், உங்க கதைல பாதி உண்மை கெடயாது, சும்மா அது செஞ்சன் இது செஞ்சன் சொல்றீங்க, எத்தன பேரு இத அமைதியா கேட்பாங்க ? இது ஏன் உங்களுக்கு புரிய மட்டேன்குதுனு தெர்ல " என்று கூறி வெறுப்புடன் பிரிந்து செல்கிறான்.

பின்னர் கதை தடம் மாற்றம் (தடுமாற்றம் அல்ல !) அப்பாவின் இளம் வயது பயணங்களை , வீர தீர சாகசங்களை ஒரே சீராக ப்ளாஷ்பக் காட்சிகள். அதில் அவர் தனது ஊரிலேயே(Ashton) மிகப்பெரிய சீக்காளி, இந்த ஊர் ஒரு சிறிய pond என்றும் தான் ஒரு பெரிய Fish என்று நம்பிக்கை கொள்கிறார். அந்த ஊரை விட்டு செல்கிறார், வேறோரு ஊர் போகும் வழியில் யாரும் உபயோகம் செய்யாத பாதையை அவர் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு பசுமையான நகரத்திற்கு(Spectre) வழி கொண்டுள்ளது. அங்கு சில காலம் கழித்து அந்த ஊரும் ஒரு சிறிய pond என்று நினைக்கிறார். பின்னர் அங்கிருந்தும் விடை பெறுகிறார். பின்னர் வேறொரு ஊர் சென்று அங்கிருக்கும் circus இல் ஒரு அழகியை காண்கிறார், அவரை மணக்கிறார். பின்னர் ஒரு வெளியூரில் தங்கி அங்கு வேலையில் சேர்கிறார், தனது உழைப்பால் நிறைய காசு பார்க்கிறார். மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது தான் அந்த பசுமை நகரம் Spectre சின்னாபின்னமாகி கிடப்பதை கண்டு அதிர்ர்ச்சி ஆகிறார். கையில் வைத்த பணமும் நண்பரிடம் கடன் வாங்கியும் அந்த ஊரை புனர் நிர்மாணம் செய்து அந்த நகரத்தை விட்டு தன் மனைவியை காண வீட்டுக்கு செல்கிறார்.

கதை மீண்டும் அதே தடத்தில், சில ஆண்டுகள் கழித்து, அம்மாவிடமிருந்து மகனுக்கு(Will Bloom) ஒரு phone செய்கிறாள், அப்பாவிற்கு உடல் நலம் குன்றுகிறது என்று கூறுகிறாள். மகன் அவசரம் அவசரமாக புறப்பட தயாராகின்றான், தானும் வருவதாக அவனது நிறை மாத கர்ப்பிணி மனைவி(Marion Cotillard) சொல்கிறாள். இருவரும் மூட்டை முடிச்சு கட்டுகின்றனர்.

உடல் நலம் விசாரிக்கும் நேரத்தில் மருமகளிடத்தில் தனது மொக்கையை continue செய்கிறார் மாமனார். மகன் காண்டாகிறான்(மறுபடியும்). வீட்டில் உள்ள பழைய சாமான்களை ஒழிக்க உதவுமாறு மகனிடம் கேட்கிறார் தாய். அம்மாவின் வேண்டுகோளிக்கிணங்க மகன் பழைய சாமான்களை ஒழிக்கும் நேரத்தில் தன் அப்பா புருடா விட்ட கதைகளுக்கு சான்றுகள் தற்செயலாக கிடைக்கின்றன. இவை கூட தன் அப்பாவின் புருடா சான்றாக இருக்கும் என்ற சந்தேகத்தை தீர்க்க, தன் தந்தையால் புனர் நிர்மாணம் செய்ய பட்ட நகரத்தை நோக்கி கிளம்புகிறான் மகன்.

அங்கு அவன் தந்தை அவனது சிறு வயதில் கூறிய அனைத்து தற்பெருமை கதைகளும் உண்மையா இல்லையா என கண்டுபிடித்து அப்பாவிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது மீதி கதை.


படத்தில் நாம நோட் பண்ணவேண்டியது நிறைய. இது ஒரு சாதாரண அப்பா மகன் செண்டிமெண்ட் படமப்பா என்றும் சொன்னாலும், அந்த பிளாஷ்பாக் காட்சிகள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் career குறித்து முடிவு செய்ய வேண்டிய பாடம்.
திரைக்கதையும் சும்மா கெடையாது (நான் படத்தோட அருமை தெரியாமல் ரெண்டு தடவ தூங்கி படத்த பாதியிலே நிப்பாட்டிட்டன், அலுவல் அயர்ச்சிப்பா :)). கதை இரண்டு தடமாக பிரிந்தாலும், அவை ஒன்னு சேர வேண்டிய இடத்தில் ஒரு seamless fit .



Related Posts