Saturday, 22 March 2014

தமிழ்க்கவிதைகள் #4 : கேள்விகளும் பதில்களும்



இப்படியாகக் கழிகின்றன
என் 
எல்லாப் பொழுதுகளும்..

வைத்துவிட்டுப் போன புன்னகைகள்
திரும்பி வரும்முன்னே
நசுங்கிக் கிடக்கின்றன..

வந்து பார்க்கையில்
செடிரோஜாப் பூக்கள்
பாதிதான் இருக்கின்றன.

பொக்கிஷமான கண்ணீர்த்துளியை
யாரேனும்
சாக்கடையில் வீசிவிட்டுப்
போயிருக்கிறார்கள்.

தேடிச் சேர்த்த
கூழாங்கற்களை
கட்டிடம் கட்டப்
பயன்படுத்தி விட்டார்கள்.

என்ன மயிரு புன்னகை
இன்னொருக்க சிரிச்சிட்டாப் போச்சு
என்ன மயிரு ரோசாப்பூ
நாளைக்கு பூக்காமலா போகும்
என்ன மயிரு கல்லு
அதென்ன வைரமா
என்று சொல்லும் உங்களிடம்
என்ன பதில் சொல்ல

அந்தப் புன்னகை
இறந்தவனின் கடைசிப் புன்னகையென்றும்
அந்த ரோஜா
அச்செடி எனக்காகப் பூத்ததென்றும்
அந்த கூழாங்கற்களை
இறக்குமுன் அந்நதி
எனக்குத் தந்ததென்றும்
எப்படி விளக்க முடியும் உங்களிடம்

உங்கள் கேள்விகள் எளிமையானவை
என் பதில்களால் உங்களைக் கொல்ல
நான் விரும்பவில்லை.


No comments:

Related Posts

  • சிறுகதைகள்  #1: காளையும் பின்னே ஒரு பரிணாம வளர்ச்சியும்
    03.02.2014 - 0 Comments
    வெயிலில் வெந்து தகித்துப்போன தார் சாலை பின்னிரவின் இலேசான குளிரில் இலைப்பாறிக்…
  • Ezhil thappu pannittan
    18.04.2015 - 0 Comments
    Innoarulagathile katha intha mathiri koode irukkalam Gowri flashback Gowri nalla pesara type.…
  • The first and best sign you make in internet when you were bored to death.
    18.05.2015 - 0 Comments
    "qwertyuiopasdfghjklzxcvbnm" Have you ever came across this weird word? I dont know too. I was bored to…
  • Bloggers Intro #19: Ashwakann
    26.03.2014 - 0 Comments
    Ashwakann >>Click here to view all…
  • Bloggers Intro #3: CyberHe@d
    05.02.2014 - 0 Comments
    CyberHe@d Am CyberHe@d, an entry point for trying out new. >>Click here to view…